திண்டுக்கலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணருக்கு 16 வகை அபிஷேகம்

திண்டுக்கலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் சிலைக்கு 16 வகை அபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2021-08-30 09:06 GMT

திண்டுக்கலின் மையப்பகுதியில் அமைந்துள்ளது சீனிவாசப் பெருமாள் கோவில். இங்கு உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் சன்னதியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பால், பன்னீர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், இளநீர், கரும்பு சாறு, செர்ணம், அன்னம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் கிருஷ்ணருக்கு செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

பிறகு ஆராதனைகள் சிறப்பு அலகாரத்தில் கிருஷ்ணர் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாளித்தார் .

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்று சென்றனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிறுவாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News