100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி மெல்லோட்ட பேரணி

Update: 2021-03-11 05:30 GMT

திண்டுக்கல்லில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மெல்லோட்ட பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது .இந்த சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களித்து 100 சதவீத வாக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மெல்லோட்ட பேரணியை திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமி துவக்கி வைத்தார்.

இந்த பேரணியில் மாவட்ட எஸ்பி., ரவளிப்பிரியா மற்றும் அதிகாரிகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.பேரணி முகாம் அலுவலகத்தில் தொடங்கி பேருந்து நிலையம் மெயின் ரோடு வழியாக நகரின் முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் முகாம் அலுவலகத்தில் முடிவடைந்தது. பேரணியில் மாணவ மாணவிகளின் சிலம்பாட்டம் நடந்தது. 

Tags:    

Similar News