குடிபோதையில் பஸ் நிலையம் அருகே ரகளை: 108 ஆம்புலன்ஸ்ஸில் அனுப்பி வைப்பு

குடிபோதையில் பஸ் நிலையம் அருகே போதை ஆசாமி ரகளை, 108 ஆம்புலன்ஸ்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.

Update: 2021-07-13 16:36 GMT

திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே திடீரென்று ஒருவர் ரத்த வெள்ளத்தில் சாலை மறியலில் ஈடுபட்டார். அருகே சென்று பார்த்தால் அவர் ஒரு போதை ஆசாமி அவர் குடித்துவிட்டு கீழே விழுந்ததில் முகம் ,கை ,கால்களில் சிறிய அளவில் காயத்துடன ரத்தம் கறையோடு நடு சாலையில் அமர்ந்து போதையில் எந்திரிக்க முடியாமல் உட்கார்ந்து விட்டார்.

இதனால் பஸ் நிலையத்திலிருந்து கிளம்பிய பேருந்துகள் குடி போதை ஆசாமியை கடக்க முடியாமல் நின்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அருகே இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கும் 108 வாகனத்திலும் தெரிவிக்க போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து வந்து குடி போதை ஆசாமியை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.போதை ஆசாமி யினால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News