திண்டுக்கல்: தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் அறிவிப்பு மக்களை சென்று அடையாததால் அவதி

திண்டுக்கல்லில் நடைபெறும் தடுப்பூசி முகாம்கள் குறித்த அறிவிப்பு பொதுமக்களை சென்று அடையாததால் பொதுமக்கள் அவதி.

Update: 2021-07-13 12:26 GMT

திண்டுக்கல்லில் நடைபெறும் தடுப்பூசி முகாம்கள் குறித்த அறிவிப்பு பொதுமக்களை சென்று அடையாததால் பொதுமக்கள் அவதி. திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு இடங்களில் கொரானா தடுப்பூசி மையம் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சவேரியார் ஆலயத்தில் அமைந்துள்ள தூய சவேரியார் ஆலயத்தில் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் இருந்த 350 நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் அங்கு குவிந்த ஏராளமானோர் டோக்கன் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் அங்கு வந்த பொதுமக்கள் தங்களுக்கு தடுப்பூசி செலுத்தும் எந்த ஒரு தகவலும் வரவில்லை என்றும் தாங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வத்துடன் வந்தாலும் தங்களை மாநகராட்சி அதிகாரிகள் அழைக்கழிக்கின்றனர் என்றும் கவலையுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News