அறநிலையத்துறை சார்பில் அன்னதானம் திட்டம் - தொடங்கி வைத்த அமைச்சர்

கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி

Update: 2021-05-13 15:59 GMT

அறநிலையத்துறை சார்பில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை திண்டுக்கல்லில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தமிழக அறநிலையத்துறை சார்பில் அன்னதானம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார்

அந்த திட்டத்தை இன்று 13.05.21 தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் திட்டத்தை துவக்கி வைத்தார்.

அப்பொழுது பேசுகையில் நாள்தோறும் திண்டுக்கல் மற்றும் பழனி அரசு மருத்துவமனைகளில் தலா 2500 பொதுமக்களுக்கு உணவு வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான 39 திருக்கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்த கோயில்களில் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அன்னதானம் திட்டம் தற்போது மீண்டும் துவக்கப்பட்டுள்ளது

பொதுமக்களுக்கு அன்னதானம் பொட்டலமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இன்று முதல் செயல்படுத்தப் பட்டுள்ளது என தெரிவித்தார்.


Tags:    

Similar News