மது போதையில் தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருவொற்றியூர் அருகே, மது போதையில் தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2022-01-26 02:15 GMT

திருவொற்றியூர் பகுதியில் உள்ள ராஜாஜி நகரில் வசித்து வருபவர் நித்யானந்தம் (26);  கூலி தொழிலாளி.  திருமணமாகாத நிலையில், தாய்,  தம்பியுடன் வசித்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தினமும் அதிகமாக குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

வழக்கம் போல்,  நேற்று நிலை தடுமாறும் அளவிற்கு போதையான நித்யானந்தம் தனது வீட்டிற்கு சென்று சமயலறையில்  இருந்த மண்ணெண்ணெய் எடுத்து, தனக்கு தானே உடலில் ஊற்றி  தீ வைத்து கொண்டார். தீவைத்துக் கொண்ட சில நிமிடங்களில் அவரது சகோதரரான லோகேஷ், இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து அவரை மீட்டு,  சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன்றிரிதாபமாக உயிரிழந்தார்.  இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News