புல்வாமா அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் குண்டு துளைத்து காவல் அதிகாரி மரணம்..!

தெற்கு காஷ்மீரில், புல்வாமா அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் உடலில் குண்டுகள் துளைத்து காவல் அதிகாரி உயிரிழந்தார்.

Update: 2022-06-18 06:07 GMT

தெற்கு காஷ்மீர் புல்வாமா அருகே வயல்வெளியில் பயங்கரவாதிகள் சுட்டதில் உயிரிழந்த காவல் அதிகாரி உடல் கிடந்த வீடு.

தெற்கு காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் உள்ள சம்பூரா கிராமத்தின் நெல் வயல்வெளியில் இருந்து அந்த காவலர் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று, உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், உயிரிழந்தது காவல்துறை உதவி ஆய்வாளர் பரூக் அஹ்மத் மிர் என்று அடையாளம் தெரியவந்தது.

உயிரிழந்த காவல் அதிகாரி 23 ஐ.ஆர்.பி பட்டாலியனில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், குண்டுகள் துளைத்து, அப்பகுதியில் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. உதவி ஆய்வாளர் பரூக் அஹ்மத் மீரின் உடலில் தோட்டா காயங்கள் இருந்தன.

இதையடுத்து, முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி, பரூக் அகமது மிர் நேற்று மாலையில், தனது நெல் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது, பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதியினரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News