உங்கள் கனவில் இது வந்தால், நீங்கள் பணக்காரராக மாறுவீர்கள்

Kanavil Panam Vanthal-கனவுகளில் இது வந்தால், நல்லது நடப்பதற்கான அறிகுறி. சில மோசமான கனவுகளை கண்டால், கெட்ட சம்பவங்கள் நடக்கும் என்ற நம்பிக்கை, பலரிடம் காணப்படுகிறது. இது, உண்மையா, பொய்யா என்பதை விட, மனதின் எண்ணங்களும், குழப்பங்களும், கவலைகளும், பயம் சார்ந்த விஷயங்களுமே கனவுகளாக வருகிறது என்ற கருத்தும் உள்ளது.

Update: 2022-10-06 13:16 GMT

Kanavil Panam Vanthal

Kanavil Panam Vanthal-கனவு என்பது ஒருவர் தூங்கும்போது, அவரது மனத்தில் எழும் மனப் படிமங்கள், காட்சிகள், ஓசைகள், உணர்வுகள், நிகழ்வுகளைக் குறிக்கிறது. ஒருவர் கனவு காணும் போது அவரது கண்களின் அசைவுகள் காணப்படுகிறது. கனவு என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு முழுமையான அறிவியல் புரிதல் இன்னும் இல்லை. மூளையில் உள்ள நினைவுக் குறிப்புகளை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தும் செயல்பாட்டின் விளைவாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இது அனைத்து பாலூட்டிகளிலும் ஏற்படக்கூடிய விளைவாகும்.

நாம் தூங்கும் போது நமக்கு நிறைய கனவுகள் வரும். சில நேரங்களில், கண்ணை மூடி படுத்தாலே போதும், அப்போதும் கனவு வரும். அப்படி நாம் காணும் கனவு, சில நேரங்களில் பலிக்கும். நாம் இப்போது கனவில் சிலவற்றைக் கண்டால் அதிர்ஷ்டம் கைகூடும் என்ற நம்பிக்கை உள்ளது.

இன்றைய வாழ்வு, ஆசைகள் நிறைந்தது; தேவைகள் நிறைந்தது. இதுவரை வாழ்ந்த தலைமுறைகளில், இந்த தலைமுறைக்குதான், எண்ணிலடங்கா வாய்ப்புகளும், வசதிகளும் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மொபைல் போன், இன்டர்நெட் பயன்பாடு போன்றவை, மிக சாதாரண மனிதர்களுக்கு கூட கிடைத்திருக்கிறது. இத்தகைய வசதி, வாய்ப்புகளை அடைய, அவை தொடர்ந்து பயன்படுத்த, பணம் மிக அவசியமாகிறது.

காலையில், பல் துலக்க பயன்படுத்தப்படும் டூத் பேஸ்ட்டில் துவங்கி, இரவு துாங்க போகும் போது, கொளுத்தி வைக்கும் கொசுவர்த்தி வரை, வாழ்க்கையில் எது தேவை என்றாலும், பணம் மிகவும் அவசியம். ஆக, பணக்காரராக வாழ வேண்டும் என்ற ஆசை, பாகுபாடின்றி அனைவருக்குமே தோன்றும். இதில் வேடிக்கை என்னவென்றால், தனது வாழ்நாள் தேவைக்கான போதிய பண வசதி, செல்வாக்கு இருந்தும், சில மனிதர்கள் இன்னும், இன்னும் பணத்தை தேடி ஓடிக்கொண்டே இருக்கின்றனர். பணத்தை குவித்துக்கொண்டே இருக்கின்றனர். ஏனென்றால், பணம் எப்போதுமே 'அல்ட்டிமேட் ஸ்டார்'தான். 

எனவே, பணம் குறித்த நினைவுகள் நிறைந்த மனிதர்கள், அவர்களின் ஆசை நிறைவேறுமா, என எதிர்பார்க்கின்றனர். அது நிராசையாக ஆகும்போது, மனம் வாடுகின்றனர். ஆனால், சில கனவுகள், அவர்களை பணக்காரர்களாக மாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.

கம்மல்(காதணி):

காதில் அணியும் அணிகலன்களைக் கனவில் கண்டால், அந்த நாள் முதல் வரும் வாய்ப்புகளை பயன்படுத்துங்கள். நிறைய பணம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மோதிரம்:

கனவில்,  நீங்கள் மோதிரம் அணிவதாக கண்டால், மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். லட்சுமி தேவியின் அருள் உங்கள் மேல் உள்ளது என்று அர்த்தம்.

தங்கம்:

உங்கள் கனவில் தங்கத்தை கண்டால், நீங்கள் விரைவில் பணக்காரர் ஆகப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

விளக்கு:

கனவில் விளக்கை கண்டீர்கள் என்றால், உங்களை தேடி நிறைய பணம் வரப்போகிறது என்று அர்த்தம்.

பாம்பு:

நீங்கள் பாம்பை பணம் வைக்கும் பெட்டியின் அருகில் பார்த்தால், பண வரவு அதிகரிக்கும் என்பதுக்கு அறிகுறியாகும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News