பிரியங்கா காந்திக்கு கொரோனா
காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு, இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தொற்று உறுதி செய்யப்பட்டபோது, சோனியா காந்தி மகள் பிரியங்கா காந்திக்கு லேசான அறிகுறியுடன் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் இன்று பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பதிவில், இன்று மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, வீட்டில் தனிமையில் இருக்கிறேன் என, தெரிவித்துள்ளார்.