மணாலியில் மேகவெடிப்பு: வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டது
Cloudburst in Himachal Pradesh - இமாச்சலப் பிரதேசத்தில் சோலாங்கை மணாலியுடன் இணைக்கும் மரப்பாலம் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
Cloudburst in Himachal Pradesh -மணாலியில் உள்ள பல்சன் செரி நல்லாவில் மேக வெடிப்பு ஏற்பட்டது. தகவல்களின்படி, மேக வெடிப்பு காரணமாக உயிர் சேதம் எதுவும் பதிவாகவில்லை, ஆனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஆற்றில் இருந்து மக்கள் விலகி இருக்குமாறு நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேக வெடிப்பு காரணமாக பியாஸ் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே, பியாஸ் ஆற்றின் கரையோரத்தில் உள்ள பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இந்த சம்பவத்தில் உயிர் மற்றும் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் சோலாங் கிராமத்தை இணைக்கும் தற்காலிக மரப்பாலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. இது தவிர, லாஹவுலின் டெலிங் நாலாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பள்ளத்தாக்கின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2