திருத்தணியில் பெண் தூக்கிட்டு தற்கொலை
திருத்தணியில் கடன் பிரச்சினையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.;
திருத்தணியில் பெண் தற்கொலை (மாதிரி படம்)
திருத்தணியில் 2-குழந்தைகளின் தாய் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது குறித்து போலீசார் விசாரணை செய்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் செந்தமிழ் நகர் வடக்கு பகுதியில் வசித்து வருபவர் சதீஷ் இவர் கட்டட தொழிலில் கூலி வேலையாக சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஆஷா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது ஒரு குழந்தை மூன்றாம் வகுப்பு மற்றொரு குழந்தை ஒன்றாம் வகுப்பு திருத்தணியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த இரண்டு குழந்தைகளையும் ஆஷா தனது தாய் வீடு உள்ள கலைஞர் நகர் பகுதியில் எடுத்துச் சென்று குழந்தைகளை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தவர். வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அருகில் உள்ள வீட்டார் ஆஷா வீட்டுக்கு வெளியே வராததால் கதவு தட்டி பார்த்துள்ளனர்.
வெகு நேரமாக வராததால் திருத்தணி காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தூக்கிட்டு ஆஷா தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றி திருத்தணி போலீசார் திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு ஆஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆஷா, சதீஷ் தம்பதியினர் இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிறது.இவர்கள் திருத்தணியில் நிதி நிறுவனம் ஒன்றில் ஒரு லட்சம் ரூபாய் கட்டினால் மாதம் பத்தாயிரம் வட்டி கொடுக்கப்படும் என்று கூறிய நிதி நிறுவனத்தில் அதிக பணம் முதலீடு செய்து இதில் அதிக அளவு ஏமாற்றமடைந்து அந்த கம்பெனி இவர்களை ஏமாற்றியதாகவும்அதில் மிகவும் அதிக அளவு கடன் அதிகரித்துள்ளது.
இதனால் கணவன் மனைவிக்கு டையே தொடர்ச்சியாக பிரச்சனை வந்ததே இதற்கு காரணமாக இருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.