கணவன் இறந்த சோகத்தில் மனைவி தீக்குளித்து தற்கொலை

திருத்தணி அருகே கணவன் உயிரிழப்பால் மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-01-24 03:00 GMT

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள வேலாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் நாகசாமி (49). இவர் கட்டிட கூலி தொழிலாளி. மனைவி மேகலா (46). இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகளுக்கும் மேலாகிய இத்தம்பதியினருக்கு குழந்தை இல்லை.

இந்த நிலையில், கடந்த மாதம் 21ஆம் தேதி நாகசாமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து அவர் உயிரிழந்தார். கணவன் மீது அதிக பாசம் வைத்திருந்த மேகலா, கணவன் கோவிந்தசாமி இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாத விருத்தியடைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மேகல மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவருடைய உறவினர்கள் ஓடி வந்து மேகலையை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மேகலா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . கணவர் இறந்த வேதனையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News