திருத்தணி: காந்தி ரோடு பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்!

திருத்தணி நகரத்தில் உள்ள 21 வார்டுகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-05-27 08:14 GMT

திருவள்ளூர் காந்தி நகரில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திருத்தணி எம். பூபதி மற்றும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் அவர்களின் ஆலோசனைப்படி இன்று முதல் திருத்தணி நகரத்தில் உள்ள 21 வார்டுகளில் தினசரி 2 வார்டுகளுக்கு சுழற்சி முறையில் தினமும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் முறையில் இன்று திருத்தணியில் உள்ள காந்தி ரோடு பகுதியில் கடைகள் மற்றும் வீடுகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Tags:    

Similar News