திருவள்ளூர் மாவட்டத்தில் காரில் கடத்தப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டத்தில் காரில் கடத்தப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-01-12 14:08 GMT

குட்கா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் கைது செய்யப்பட்ட நபர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் களாம்பாக்கம் ஊராட்சியில் மளிகை கடை நடத்தி வருபவர் மாரியப்பன். இவருக்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த யோகேஷ்குமார் என்பவர் 8 மூட்டை ஹன்ஸ் குட்கா பொருட்களை கடைக்கு சப்ளை செய்ய மாருதி காரில் கொண்டு வந்தார்.

250 கிலோ எடையிலான ஹன்ஸ் பாக்கெட்டுகள் இதன் சந்ததை மதிப்பு 2 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. குட்காவை கடத்தி வந்தபோது ரகசிய தகவல் பேரில் காத்திருந்த எஸ். பி வருண்குமார் தலைமையிலான ஸ்பெஷல் டீம் போலீசார் 5 கி. மீ. தூரத்திற்கு துரத்தி சென்று வாகனத்தை மடக்கி சோதனை செய்ததில் குட்கா கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News