திருத்தணியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: எம்எல்ஏ தொடங்கிவைப்பு

திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாமினை எம்எல்ஏ சந்திரன் தொடங்கி வைத்தார்.

Update: 2021-09-12 13:40 GMT

திருத்தணி நகராட்சி  அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கிவைக்கும் எம்எல்ஏ சந்திரன்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் இன்று ஒரே நாளில்  ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

அதன்படி, திருத்தணி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர்.

திருத்தணி நகராட்சியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திருத்தணி எஸ்.சந்திரன் தலைமை ஏற்று துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் திமுக திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம் பூபதி, திமுக நகர செயலாளர், திருத்தணி நகராட்சி ஆணையர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News