கள்ளக்காதல் விவகாரத்தில் காதலிக்கு கத்திகுத்து- காதலன் தற்கொலை

திருவள்ளூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் காதலியை கத்தியால் குத்திய காதலன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-14 07:20 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காடு அருகே உள்ள  மணவூர் பாகசாலை காலனியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ஏசு(41). இவரது மனைவி கலையரசி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில், ஏசுவுக்கும் அவரின் வீட்டு எதிரே வசிக்கும் ஜான்சி(30) என்பவருக்கும் மூன்று ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சில நாட்களாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் ஜான்சி ஏசுவிடம் பேச மறுத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று ஜான்சி திருவாலங்காட்டில் உள்ள வங்கிக்கு சென்றுவிட்டு தனது மாமனாருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது எல்.வி.புரம் என்ற இடத்தில் மாமனாருடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது வழி மறித்த ஏசு மறைத்து வைத்திருந்த  கத்தியால் ஜான்சியின் முகம் மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த ஜான்சியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், தப்பியோடிய ஏசு மணவூர் ரயில் நிலையம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News