அடிக்கல்பட்டு கிராமத்தில் சோகம்: கொரோனா தொற்றுக்கு தம்பதியர் பலி!

திருத்தணி தாலுகா அடிக்கல்பட்டு கிராமத்தில் கொரோனா தொற்றுக்கு கணவன் மனைவி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2021-05-19 17:44 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா, திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி ஊராட்சிக்குட்பட்டது அடிக்கல்பட்டு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த (50) வயது நபர் தனியார் பஸ் ஒன்றில் நடத்துனராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த வாரம் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்தநிலையில் 3 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மனைவி தொற்றால் பாதிக்கப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News