அங்கன்வாடி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் படுகாயம்

திருத்தணி அருகே பூனிமாங்காடு கிராமத்தில் இயக்கி வரும் அரசு அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் படுகாயம்

Update: 2022-04-02 04:45 GMT

திருத்தணி அருகே பூனிமாங்காடு கிராமத்தில் இயக்கி வரும் அரசு அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் அங்கன்வாடி மையத்தில் தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் விமல்ராஜ் தலையில் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் சோகத்தையும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த பூனிமாங்காடு கிராமத்தில், அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 38 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையத்தில், சாந்தி என்ற ஆசிரியரும், சமையல் உதவியாளராக அம்முலு என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், உணவு வேளையின்போது குழந்தைகள் அனைவரும் வெளியில் சென்ற நிலையில், அங்கன்வாடி மையத்திற்குள் விமல்ராஜ் மற்றும் தீனா ஆகிய 2 குழந்தைகள் மட்டும் இருந்துள்ளனர். அப்பொழுது திடீரென அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில். இதில் அங்கன்வாடியில் படுத்திருந்த விமல்ராஜூக்கு தாடை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. அதேபோல் தீனாவிற்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, 2 குழந்தைகளை மீட்டு அருகே உள்ள பூனிமாங்காடு அரசு மருத்துவமனையில் , முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு. பின்பு சிறுவர்களின் மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில் பழுதடைந்த இதுபோன்று அங்கன்வாடி மைய கட்டிடங்கள் பள்ளி கட்டிடங்கள் அங்கங்கே கண்டுபிடித்து விபத்துக்கள் ஏற்படும் முன்பே அவற்றை அகற்றி புதிய கட்டிடங்களை கட்டினால்  இதுபோன்று நிகழ்வுகள் தொடராமல் இருக்குமென பலரும் கருத்து தெரிவித்தனர்

Tags:    

Similar News