தமிழ்நாடு பவுண்டேஷன் அறக்கட்டளை சார்பில் 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது
திருத்தணி அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் செறிவூட்டிகளை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் வழங்கினார்.;
திருத்தணி அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் செறிவூட்டிகளை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் இன்று வழங்கினார்.
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி தொகுதியில் உள்ள திருத்தணி அரசு மருத்துவமனைக்கு தமிழ்நாடு பவுண்டேஷன் அறக்கட்டளை சார்பில் 10 ஆக்சிஜன் செறிவூட்டிகளை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் இன்று திருத்தணி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை ஊழியர்கள் ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பணி நிர்வாகிகள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கட்சி தொண்டர்கள் அனைவரும் உடன் இருந்தனர்.