போரூரில் கொரோனா சித்த மருத்துவமனையை சுகாதார துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

போரூரில் 70 படுக்கைகள் கொண்ட கொரோனா சித்த மருத்துவமனையை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்

Update: 2021-05-22 16:31 GMT

போரூரில் கொரோனா சித்த மருத்துவமனையை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக தனியார் மண்டபங்கள், காலி இடங்களில் மருத்துவ மனைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் 36 வது சித்த மருத்துவமனையாக 70 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவமனை தொடங்கப்பட்டது.

மதுரவாயல் எம்.எல்.ஏ.கணபதி தலைமையில் நடைபெற்ற விழாவில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :

36 வது சித்த மருத்துவமனை இங்கு தொடங்கப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை பெறுபவருக்கு 3 வேலை உணவு வழங்கப்பட்டு பாதுகாப்பான சிகிச்சை அளிக்கப்படும். எல்லா மாவட்டங்களிலும் படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்பட்டு உள்ளது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 600 க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் வசதி கொண்ட மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளது.

கோவையில் தடுப்பூசி போடுவதில் பாரபட்சம் காட்டுவதாக சமூக வலை தளங்களில் திட்டமிட்டு அவதூறு செய்தி பரப்பப்பட்டு வருகிறது. மத்திய அரசு முலம் இதுவரை 78,49,000  தடுப்பூசி வந்துள்ளது. 71,52,000 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது. 2 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. 6 சதவீதம் விரயாமாகி விட்டது. கோவையில் மட்டும் 5,04,370 ஊசிகள் போட்டுள்ளோம், சென்னைக்கு அடுத்த படியாக கோவையில் அதிகளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இணையதளத்தில் எந்த மாவட்டத்திற்கு எவ்வளவு தடுப்பூசிகள் போடப்படுள்ளது என்பதை இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்திய அளவில் மத்திய அரசு 14.4 சதவீதம் குஜராத்துக்கும், தமிழகத்திற்கு 6.4 சதவீதம் மட்டும் தடுப்பூசி தந்துள்ளது.  ஊரடங்கால் தடுப்பூசி போடும் பணி எந்த விதத்திலும் பாதிக்காது. அடுத்த அலைகள் வந்தாலும் அதனை தடுக்க 100 மருத்துவமனைகள் என்ற இலக்குடன் செயல் பட்டு வருகிறோம் என தெரிவித்தார். இதில் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News