திருவள்ளூர் அருகே சிவன் கோவில் வளாகத்தில் சாமி சிலைகள் கண்டெடுப்பு..!

திருவள்ளூர் அருகே சிவன், பார்வதி, நடராஜர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு , வழிபாடு நடத்தி வரும் கிராம மக்கள் .

Update: 2024-06-05 12:45 GMT

கண்டெடுக்கப்பட்ட சிலைகளுக்கு மாலை  அணிவித்து பூஜை செய்த மக்கள்.

திருவள்ளூர் அருகே செம்பேடு கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் அருகே பூமிக்குள் இருந்து சிவன், பார்வதி, நடராஜன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு வழிபாடு நடத்தும் கிராம மக்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதி எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் அருகே மேல் செம்பேடு கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கோபுரம் இல்லாத காரணத்தினால் கிராமத்தைச் சார்ந்த மக்கள் பங்களிப்புடன் சிமெண்ட் ஓடுகளால் மேற்கூரை அமைத்து சிவன் மற்றும் நந்தியை வழிபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் நேற்று மாலை பிரதோஷம் என்பதால் கிராம மக்கள் சிவன் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து வழிபாடு செய்ய வந்தபோது. கோயிலுக்கு வந்த சிறுவர்கள் கோயில் வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஏதோ ஒரு பொருள் காலில் பட்டு ஒரு சிறுவன் கீழே விழுந்துள்ளான். இதையறிந்த பக்தரில் ஒருவர் அந்த சிறுவனை தூக்கி விட்டு எப்படி கிழே விழுந்தாய் என கேட்டுள்ளார்.

அப்போது அந்த சிறுவன் எனது காலில் ஏதோ பொருள் பட்டதினால் கீழே விழுந்தேன் என கூறி அந்த இடத்தை காட்டினான் இதையறிந்த பக்தர்கள் சென்று பார்த்தனர்.

அப்போது அந்த இடத்தில் பள்ளம் தோண்டிய போது சிவன், பார்வதி, நடராஜர் ஐம்பொன் உலோகங்களால் தயாரிக்கப்பட்ட சிலைகள் போல் சிலைகள் கிடைத்தது. இச்சிலைகள்  ஐம்பொன்னா  அல்லது பித்தளை பொருளால் செய்யப்பட்ட சிலையா என்று தெரியவில்லை. இதை கண்டதும் மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள் , பின்னர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்து பூ மாலைகள் அணிவித்து , மஞ்சள் குங்குமம் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.

தகவல் அறிந்த வெங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் சிவன் - பார்வதி - நடராஜர் என 3 சிலைகளும் பித்தளையா அல்லது ஐம்பொன் சிலையா என விசாரணை நடத்தி , இந்து அறநிலைய துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.னால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News