பூந்தமல்லியில் கொரோனா போன்று வேடமிட்டு நூதன விழிப்புணர்வு

பூந்தமல்லியில் கொரோனா போன்று வேடமிட்டு நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது

Update: 2021-08-06 12:56 GMT

கொரோனா போன்று வேடமிட்டு நூதன விழிப்புணர்வு பிரசாரம்

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதில் கொரோனா வேடமிட்டு தலை இல்லா மனிதன் சமூக இடைவெளியை பின்பற்றவும், முக கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், விதிகளை பின்பற்றாததால் ஏற்படும் விளைவுகளையும் பொதுமக்கள் மத்தியில் நடித்துக் காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News