ரூ.2000 கொரோனா நிவாரணம்: மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ சுதர்சனம் வழங்கினார்

சோழவரம் ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையில் கொரோனா நிவாரண தொகை ரூ.2000 மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ சுதர்சனம் வழங்கினார்

Update: 2021-05-15 11:02 GMT

கொரோனா நிவாரண நிதி ரூ.2000த்தை மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் வழங்கி தொடங்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சென்னை வட்ட திமுக செயலாளரும், மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். சுதர்சனம் கலந்து கொண்டு, சோழவரம் தொகுதி ஒன்றியம் ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையில் கொரோனா நிவாரணம் ரூ. 4000 இதில் முதல் தவணையாக பொதுமக்களுக்கு ரூ.2000 வழங்கி துவக்கி வைத்தார்.

இதில் சோழவரம் ஒன்றிய  செயலாளரும் ஒன்றிய துணைச் பொருளாளருமான கருணாகரன் மற்றும் அலமாதி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வண்ணன் உடனிருந்தனர்.

Tags:    

Similar News