பொன்னேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாஜகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-09-13 13:37 GMT

பொன்னேரியில் பா.ஜ.க வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திரிபுரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜகவினரின் அராஜகத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். 

Tags:    

Similar News