மனநலம் பாதித்த பெண், தீக்குளித்து தற்கொலை

Suicide Attempt -பொன்னேரியில் மனநலம் பாதித்த பெண் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Update: 2022-10-14 03:15 GMT

தற்கொலை செய்து கொண்ட லல்லி.

Suicide Attempt -திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாயுமான் தெருவில் குடும்பத்துடன் வசிப்பவர் ஏழுமலை. இவர் நகை செய்யும் தொழிலாளி.  இவரது மனைவி லல்லி (50) மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த ஏழு ஆண்டுகளாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளார். இருவருக்கும் திருமணம் ஆகி, வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். லல்லி சிகிச்சை முடிந்து, வீட்டில் சில நாட்களாக மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது,

வழக்கம் போல் காலையில், கணவர் ஏழுமலை வேலைக்கு சென்று விட்ட நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லல்லி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து, அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்து வந்த பொன்னேரி போலீசார்,  சடலத்தை கைப்பற்றி  பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மன உளைச்சல் காரணமாக லல்லி, தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து பொன்னேரி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News