பொன்னேரி அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் சேற்றில் சிக்கி உயிரிழந்தார்

பழவேற்காடு அருகே சாத்தான் குப்பத்தில் வசித்து வருபவர் அசோகன் என்பவர் சேற்றில் சிக்கி உயிரிழந்தார்

Update: 2022-07-17 11:00 GMT

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே சாத்தான் குப்பத்தில் வசித்து வருபவர் அசோகன்(45) மீன் படிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி சுகுணா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்

இந்நிலையில் அசோகன் பழவேற்காட்டில் உள்ள ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது ஏரியில் உள்ள சேற்றில் சிக்கி மாட்டிக்கொண்டார்.சேற்றில் இருந்து வெளியே வர நீண்ட நேரம் போராடியும் அவரால் வெளியே வர முடியாததால் சேற்று சிக்கி உயிரிழந்தார்.அங்கிருந்த மீனவர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் தகவல் அறிந்து வந்த போலீசார் விரைந்து வந்து, அசோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து போலீசார், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News