கும்மிடிப்பூண்டியில் தாசில்தார் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பேருந்து நிலையத்தில் தாசில்தார் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

Update: 2021-08-02 01:45 GMT

கும்மிடிப்பூண்டி  பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம், பஜார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கும்மிடிப்பூண்டி தாசில்தார் மகேஷ் தலைமையில் 3வது அலையை எதிர்நோக்கும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

இந்த பிரச்சாரத்திற்கு வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ், ரவி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது சாலையில் செல்லும் அரசு பேருந்து, ஆட்டோ உள்ளிட்டவைகளில் முக கவசம் அணிய வேண்டும் என பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

Similar News