திருவேற்காடு: கொரோனா தடுப்பு குறித்து முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி

திருவேற்காடு நகராட்சியில் கொரோனா தடுப்பு குறித்து முன்கள பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-05-24 06:15 GMT

 கொரோனா தடுப்பு  குறித்து முன்கள பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை நடந்தபோது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, பொதுமக்களின் இயல்பு வாழ்வை பாதித்து உள்ள சூழ்நிலையில், திருவேற்காடு நகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முன்கள பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை மையத்தை திருவேற்காடு நகராட்சியில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் இன்று தொடங் வைத்தார்.

இதில் முன் களப் பணியாளர்களின் தியாகத்தையும், அவர்கள் தங்களுடைய பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டி ஆலோசனை மையத்தையும் பொதுமக்களுக்கு தேவையான ஆலோசனை மற்றும் உதவிகளை செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News