திருவேற்காடு: மதுக்கடைகளை மூடக்கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

திருவேற்காடு பஸ் நிலையம் அருகே மதுக்கடைகளை மூடக்கோரி பாஜக திருவள்ளூர் மாவட்ட பொதுச் செயலாளர் அஸ்வின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-06-14 09:16 GMT

மதுக்கடைகளை மூடக்கோரி, திருவள்ளூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில்  தளர்வுகளுடன் கூடிய ஊடரங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனால் இன்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனை கண்டித்து பா.ஜ.க. சார்பில் திருவள்ளூர் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜசிம்ம மகேந்திரன் தலைமையில் திருவேற்காடு உட்பட்ட பகுதிகளில் மதுக்கடைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News