கொசவன்பாளையத்தில் நடந்த சாலை விபத்தில் கூலி தொழிலாளி பலி

திருநின்றவூர் கொசவன்பாளையம் பகுதியில் நடந்த சாலை விபத்தில் கூலி தொழிலாளி பலியானார், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-08-07 09:59 GMT

பைல் படம்

சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூர் கொசவன் பாளையம் பொன்னியம்மன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (60) இவர் கூலி தொழிலாளி.

நேற்று இரவு  திருநின்றவூரில் இருந்து ஷேர் ஆட்டோவில் வீட்டுக்கு சென்றார். கொசவன் பாளையம் அருகே சென்றபோது, எதிரே வந்த கார் ஷேர் ஆட்டோ மீது மோதியதில் சுப்பிரமணி காலில் படுகாயம் ஏற்பட்டது

உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் சுப்பிரமணி இறந்தார்

இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News