கொரோனாவுக்கு கணவன் பலி: மகள்களுடன் மனைவி தற்கொலை முயற்சி

கொண்டித்தோப்பு பகுதியில் கொரோனாவுக்கு கணவர் உயிரிழந்ததால் 2 மகள்களுடன் தாய் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் நடந்தது.

Update: 2021-05-17 13:47 GMT

கொண்டித்தோப்பு பகுதியில் ராஜேஸ்வரி (48) இவர் கணவர் கொரோவால் உயிரிழந்துள்ளார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கொரோனா பாதிப்பால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவர் இறந்து விட்டதால், இவர்கள் 3 பேருக்கும் உறவினர் ஒருவரே சாப்பாடு சமைத்து கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் அவர்களது உறவினர் வழக்கம்போல் சாப்பாடு கொடுக்க வந்த போது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அங்கு தாய் மற்றும் 2 மகள்கள் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 3 பேரையும் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 3 பேரும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

தற்போது 3 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சென்னை ஏழு கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில் கணவர் இறப்பினை தாங்க முடியாத ராஜேஸ்வரி தனது மகளுடன் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News