ஆவடி அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை

ஆவடி அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-02-17 09:42 GMT

ஆவடி அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள பக்தவச்சலம்புரம் ஜோதி ராமலிங்கர் தெருவில் வசித்து வந்தவர் முத்துவீரன்(77) இவரது மனைவி சரோஜினி(63).சரோஜினிக்கு கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சரோஜினி நேற்று முன்தினம் இரவு தனது அறையில் உயிரிழந்து கிடந்தார்.  மனைவி இறப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் வேதனை அடைந்தார் முத்துவீரன். இந்நிலையில்  முத்துவீரன் வீட்டின் உள்ளே மேற் கூரையில் இருந்த பைப் ஒன்றில் தனது மனைவி சரோஜினியின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று அதிகாலை இவர்களது மகன் தணிகை வேல் அங்கு வந்தார்.அவர் தனது பெற்றோர் தூங்கி இருந்த அறைக்குள் சென்று பார்த்தபோது தனது தாய் படுக்கையில் இருந்து கிடந்ததையும் தந்தை தூக்கில்  பிணமாக தொங்குவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து  தணிகை வேல் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முத்துவீரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்  இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல்நல குறைவால் மனைவி உயிரிழந்த துக்கத்தை தாங்க முடியாமல் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News