திருமுல்லைவாயலில் சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞர் போக்சோவில் கைது

திருமுல்லைவாயலில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-16 10:33 GMT

பைல் படம்

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலை சேர்ந்த 15 வயது சிறுமியை சென்னை செங்குன்றம் நல்லூரை சேர்ந்த வெங்கடேசன் (32) என்பவர் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றார்,

அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி திருமுல்லைவாயல் போலீசார் செங்குன்றம் நல்லூரைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரை போக்சோ சட்டத்தின்கீழ் நேற்று கைது செய்தனர்.

Tags:    

Similar News