அம்பத்தூர் போக்குவரத்து காவல்துறையினர் கொரோனா விழிப்புணர்வு

கொரட்டூர் காவல் நிலையம் முன்பு அம்பத்தூர் கோட்டத்திற்குட்பட்ட போக்குவரத்து காவல்துறையினர் அங்குள்ள வாகன ஓட்டிகளிடையே கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2021-05-04 11:50 GMT

சென்னை கொரட்டூர் காவல் நிலையம் முன்பு அம்பத்தூர் கோட்டத்திற்குட்பட்ட போக்குவரத்து காவல்துறையினர் நேற்று அங்குள்ள வாகன ஓட்டிகளிடையே கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது மிக வேகமாக பரவி வருகின்ற சூழலில், தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல் சுகாதாரத்துறை, காவல்துறையினரும் தங்களுடைய பணியை இடைவிடாது கொரோனா தடுப்பு விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் சென்னை கொரட்டூர் காவல் நிலையத்தின் முன்பு அம்பத்தூர் கோட்டத்துக்குட்பட்ட போக்குவரத்துக் காவல்துறையினர், அங்கு வரும் வாகன ஓட்டிகளை அழைத்து, கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பாதுகாப்பு குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News