திருநின்றவூரில் கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த அமைச்சர்

திருநின்றவூரில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை பால்வளத்துறை அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்.

Update: 2021-07-17 13:48 GMT

திருநின்றவூரில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.

ஆவடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது திருநின்றவூர், நடுக்குத்தகை பகுதியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இதனை தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் பங்கேற்று துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வமுடன் பங்கேற்றனர். இவர்களுக்கு கோவிட் சில்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த கொள்ள வந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News