ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் புகுந்த 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

Update: 2021-08-17 14:34 GMT

கோழிப்பண்ணையில் சிக்கிய மலைப்பாம்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல்தூருகம் பகுதியில் ஆசிரியர் சொக்கநாதன் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணை ஒன்று உள்ளது.

இந்த கோழிப்பண்ணையில் இன்று திடீரென சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு நுழைந்துள்ளதாக அங்கு பணிபுரியும் பணியாளர்கள் கூச்சலிட்டு உள்ளன கிராம மக்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில்  விரைந்து சென்று கிராம மக்கள் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து ஆம்பூர் வனத்துறையினரிடம்  ஒப்படைத்தனர் மலைப்பாம்பை வனத்துறையினர்  கொண்டுச் சென்று காப்பு காட்டுப்பகுதியில்  விட்டனர்..

Tags:    

Similar News