ஆம்பூரில் மீனவர் படுகொலையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு மீனவர் படுகொலையை கண்டித்து நாம் தமிழர் கட்சி போராட்டம்.

Update: 2021-10-27 14:17 GMT

ஆம்பூரில் மீனவர் படுகொலையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

ஆம்பூரில் மீனவர் படுகொலையை கண்டித்து நாம் தமிழர் கட்சி போராட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கோட்டப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் ராஜ்கிரன் படுகொலையை கண்டித்து தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக படுகொலை செய்து வரும் இலங்கை சிங்கள  கடற்படையையும் அதை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.

Tags:    

Similar News