ஆம்பூரில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி முகாமை எம்எல்ஏ துவக்கி வைத்தார்

ஆம்பூரில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் துவக்கி வைத்தார்

Update: 2021-07-12 15:03 GMT

ஆம்பூரில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ துவக்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தலாம் என மருத்துவதுறையினர் அறிவித்திருந்த நிலையில் இத்திட்டத்தினை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெங்கடசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் துவக்கி வைத்தார். இதனால் ஆர்வமுடன் வந்து கர்ப்பிணித் தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்

இதனைத் தொடர்ந்து மருத்துவமனை அருகில் 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் பணி புரிந்து வந்த பெண்களிடம் தங்களது குறைகளை கேட்டறிந்தார். இதில் அரசு அதிகாரிகள் கட்சியினர் பொதுமக்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்

Tags:    

Similar News