பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய போது நடந்த விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே பொங்கல்  விடுமுறை முடித்துக்கொண்டு ஊர் திரும்பிய  போது நடந்த வாகன விபத்தில்  8ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு

Update: 2022-01-19 12:46 GMT

விபத்தில் உயிரிழந்த மாணவன் ஸ்ரீகாந்த்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திரா எல்லை பகுதியில் உள்ள மாதகடப்பா மலை கிராமத்தை சேர்ந்தவர் திலீப்குமார் (22 வயது) இவர் சென்னை சேத்துப்பட்டில் தனியார் பேக்கரியில் பணிபுரிந்து வருகிறார். பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர் மீண்டும் விடுமுறை முடிந்து  இன்று  தனது இருசக்கர வாகனத்தில் திலீப் குமார் அவரது உறவினரான 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஸ்ரீகாந்தை  (14 வயது) அழைத்துக்கொண்டு சென்னை சென்று கொண்டு இருந்தார்

அப்போது ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் ரயில்வே மேம்பாலத்தின் மீது இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்த போது வாகனம் நிலை தடுமாறி தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த மாணவன் ஸ்ரீகாந்த் தூக்கி வீசப்பட்டு 50 அடி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால்  நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காயங்களுடன் திலீப் குமார் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் மாணவன் ஸ்ரீகாந்த் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News