ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை

ஆம்பூர் பெரியாகுப்பம் தேசிய நெடுஞ்சாலைஅருகே உள்ள இந்தியா ஏடிஎம் மையத்தில் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது

Update: 2021-11-27 09:00 GMT

கொள்ளை முயற்சி நடந்த ஏடிஎம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாகுப்பம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இந்தியா ஏடிஎம் மையம் உள்ளது. இந்த  ஏடிஎம் மையத்தில் இயந்திரம் உடைக்கப்பட்டுள்ளதாக ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் மற்றும் ஏடிஎம் மைய மேலாளர் ராஜேஷ் குமாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் ஏடிஎம் மைய மேலாளர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ஏடிஎம் மைய மேலாளர் ராஜேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் உள்ள காட்சிகளை கைப்பற்றி ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ஆம்பூர் அருகே மர்ம நபர்கள் ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

Tags:    

Similar News