வீட்டுப்பாடம் எழுதி வராத யுகேஜி மாணவனை பிரம்பால் அடித்த தனியார் பள்ளி ஆசிரியை

ஆம்பூர் அருகே வீட்டுப்பாடம் எழுதி வரவில்லை என்று யுகேஜி மாணவனை பிரம்பால் தாக்கிய தனியார் பள்ளி ஆசிரியை பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார்

Update: 2022-02-26 12:30 GMT

மாதிரி படம் 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடைய ராஜபாளையம் பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது 

இதில் மாதனூர் பகுதியை சேர்ந்த சதீஷ்-இளவரசி தம்பதியினரின் மகன் சர்வின் யுகேஜி பயின்று வருகிறான்.  நேற்று பள்ளிக்கு சென்று அவரை வீட்டுப்பாடம் எழுதி வரவில்லை என்று பள்ளி ஆசிரியை சத்யா என்பவர் பிரம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார்.  இதில் கை மற்றும் உடல் முழுவதும் காயங்களுடன் வீட்டுக்கு சென்ற மாணவன் சர்வின்,  பெற்றோர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து இன்று பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் இது குறித்து முறையிட்டனர்

அதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர், வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு பள்ளி ஆசிரியை சத்யாவை பள்ளி இருந்து பணிநீக்கம் செய்து உத்தரவிட்டனர் மேலும் பள்ளி ஆசிரியை சத்யாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News