ஆம்பூரில் வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு: வாக்குப்பதிவு தாமதம்

ஆம்பூரில் வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு காரணமாக ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வாக்குப்பதிவு துவங்கியது

Update: 2022-02-19 06:00 GMT

வாக்கு பதிவு இயந்திரத்தை சரி செய்யும் பணியில் தேர்தல் அலுவலர்கள் 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் மொத்தம் 25 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் 25 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 24 வது வார்டு 47 M வாக்கு மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில்  கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு பிறகு வாக்கு பதிவு துவங்கியது.

அதன் பின்னர்,  நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் வாக்களித்தனர்.

Tags:    

Similar News