ஆம்பூரில் சாலை விபத்தில் தனியார் பள்ளி நிர்வாக உதவியாளர் உயிரிழப்பு

ஆம்பூரில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தனியார் பள்ளி நிர்வாக உதவியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

Update: 2022-01-31 14:18 GMT

வாகன விபத்தில் பலியான தனியார் பள்ளி ஊழியர் 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த புது கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 36).  இவர் ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி  வருகிறார்

மகேந்திரன் இன்று மாலை பள்ளியில் இருந்து தனது வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலையில் சிக்னலில் நின்று பின்னர் சாலையை கடக்க முயன்றார். அப்போது பெங்களூரில் இருந்து சென்னைக்கு பருப்பு லோடு ஏற்றி வந்த லாரி  இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் மகேந்திரன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனை தொடர்ந்து லாரியில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நகர காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் செந்தில் ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்

Tags:    

Similar News