ஆம்பூர் அருகே கள்ளச் சாராயம் விற்ற பெண் கைது. கள்ளச்சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

ஆம்பூர் அருகே கள்ளச் சாராயம் விற்ற பெண்ணிடமிருந்து 100 கள்ளச்சாராய பாக்கெட்டுகள், 20 மதுபாட்டில்கள் பறிமுதல்

Update: 2021-07-31 06:45 GMT

மாதிரி படம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஏ -கஸ்பா பகுதியில் கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் தனிப்பிரிவு போலீசார் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கள்ளத்தனமாக பதுக்கி வைத்து மது பாட்டில் மற்றும் கள்ளச்சாராயம் விற்றது தெரியவந்தது அதனைத் தொடர்ந்து சாராயம் விற்ற மல்லிகா (வயது 54) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து அவரிடம் இருந்து 20 மது பாட்டில்கள் மற்றும் 100 கள்ளச்சாராய பாக்கெட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து நகர போலீசாரிடம் ஒப்படைத்தனர். மல்லிகா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News