ஆம்பூர் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

ஆம்பூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு. போலீசார் விசாரணை

Update: 2021-06-21 15:30 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பூவழகி.  இன்று மாலை நிலத்திலிருந்து வீட்டிற்குச் செல்லும்போது மணியாரகுப்பம் அருகே நடந்து சென்ற போது  இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பூவழகி கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓட்டம்.

இதுகுறித்து பூவழகி ஆம்பூர் கிராமிய காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News