ஆம்பூர் அருகே ஏரிக்கரை பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்

ஆம்பூர் அருகே ஏரிக்கரை பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு. ஆம்பூர் நகர போலீசார் விசாரணை

Update: 2021-07-03 12:45 GMT

ஆம்பூர் அருகே ஏரிக்கரை பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர்குப்பம்  ஏரிக்கரை பகுதியில் உடல் முழுவதும் அழுகிய  நிலையில் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக ஆம்பூர் நகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் விரைந்து சென்ற ஆம்பூர் நகர காவல் துறையினர் ஏரி பகுதியில் இருந்த சடலத்தை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்

பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது அவர் அதே பகுதியை சேர்ந்த ஆல்பர்ட் (வயது 40) என்பது தெரியவந்தது. குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News