மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாஜக முற்றுகை போராட்டம்

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணம் பெறுவதாக கூறி பாஜக மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-12-15 16:35 GMT

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 44 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சிகளில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 1200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கப்பட்டு உள்ளது

இவர்களுக்கு வீடு கட்ட ஆணை வழங்குவதற்காக  ஊராட்சி செயலாளர்கள் மூலம் 10000 முதல் 20000 வரை பணம் பெற்று வீடு ஒதுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்து திருப்பத்தூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமையில் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பணம் பெரும் ஊராட்சி பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வட்டார வளர்ச்சி துணை அலுவலரிடம் புகார் கொடுத்தனர்.

புகாரைப் பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், பிரதமரின் புகைப்படத்தை வழங்கி உடனடியாக வைக்கக்கோரி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்  இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Tags:    

Similar News