மாமனார் தலையில் மருமகன் கல்லை போட்டு கொலை

கோயம்பேட்டில் குடும்பத் தகராறில் மாமனார் தலையில் கல்லை போட்டு கொலை மருமகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-06-03 04:45 GMT

மாமனாரை கொலை செய்த மருமகன் மகேஷ் கைது.

சென்னை கோயம்பேட்டில் குடும்ப தகராறில் மாமனாரின் தலையில் கல்லை போட்ட வழக்கில் மருமகன் கைது செய்து சிறையில் அடைத்த வழக்கில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாமனார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை கோயம்பேடு அமுதா நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணண்(65) இவர் அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் வாட்ச்மேன் வேலை செய்து வருகிறார். இவரது மகளை அதே பகுதியை சேர்ந்த மகேஷ்(36) என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சனையில் அடிகடி மனைவி இடம் தகராறு செய்து வந்துள்ளதை கண்ணன் தட்டி கேட்டுள்ளார். இதனால் அடிகடி மாமனாருக்கும் மருமகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் 23ம் தேதி அன்று இரவு மகேஷ் தனது மனைவி இடம் தகராறில் ஈடுபட்டு மனைவியை தாக்கிய போது இதனை கண்ட கண்ணன் எதற்காக எனது மகளிடம் தகராறு செய்து, அடிக்கிறாய் என தட்டி கேட்டபோது இதில் கடும் ஆத்திரமடைந்த மகேஷ் என் குடும்ப பிரச்சனையில் நீ எதற்காக என்னை கேள்வி கேட்கிறாய் என்று ஆவேசமாக பேசி மாமனாரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றார்.

பின்னர் பிள்ளையார் கோவிலில் வாச்டாமேன் வேலை கொண்டு இருந்த கண்ணன் அங்கு தூங்கி கொண்டிருந்த போது அங்கு வந்த மகேஷ் மாமனாரின் தலையில் மிக பெரிய கல்லை போட்டு விட்டு அங்கு இருந்து கடலூர் மாவட்டத்திற்கு தப்பி சென்றார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோயம்பேடு போலீசார் படுகாயம் அடைந்த முதியவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து தனிப்படை போலீசார் கடலூர் மாவட்டம் சென்று மகேஷை பிடித்து கைது செய்து அன்றே புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக படுகாயம் அடைந்த கண்ணன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் கண்ணன் இன்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இதனையடுத்து கோயம்பேடு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கோயம்பேடு போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் குடும்ப பிரச்சையில் மாமனாரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் மருமகன் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

Similar News