மாதவரம் கதிர்வேடு வீரராகவா நகரில் பொது மக்கள் குறைகேட்பு கூட்டம்

Today Meeting -சென்னை மாதவரம் கதிர்வேடு வீரராகவா நகரில் பொது மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-24 02:40 GMT

சென்னை மாதவரம் வீரராகவா நகரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

Today Meeting - மாதவரம் அடுத்த சென்னை மேற்கு மண்டலம் 31 வது வார்டு கதிர்வேடு வீரராகவா நகர் பகுதியில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு தலைமை வகித்தார். கூட்டத்தில் மெட்ரோ வாட்டர் உதவி செயற்பொறியாளர் தங்கம். மின்வாரியத் துறை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர். மற்றும் சுரேந்தர். வட்டார காங்கிரஸ் பொறுப்பாளர் பாபு உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வீரராகவபுரம் பகுதி மக்களுக்கு உண்டான மழைநீர் கால்வாய்களை சீரமைத்து தருதல், சாலை, சுகாதாரப்பணிகள் ,குப்பை கழிவுகளை தரம் பிரித்து அப்புறப்படுத்துதல், ஊழியர்களின் பணிகள் குறித்தும் ,மின்விளக்குகள், கோவில் ,குடிநீர் தேக்க தொட்டி, மின்சார பராமரிப்பு ,உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அப்பகுதி மக்களிடையே கேட்டறிந்தும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு உரிய அதிகாரிகளை அழைத்து நேரடியாக பொதுமக்களின் மத்தியில் விவாதம் செய்து தீர்வுக்கான ஆவணம் செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் திரளானோர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News