புழல் சிறையில் 21 சிறைக்கைதிகள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்

திருவள்ளூர் மாவட்டம் புழல் மத்திய சிறையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 21 கைதிகள் தேர்வு எழுதினர்.

Update: 2022-05-05 08:45 GMT

தமிழகத்தில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையான பிளஸ் டு பொதுத்தேர்வு இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கியது. இதில் புழல் மத்திய சிறையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு சிறைக்கைதிகள் எழுதும் வகையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது .

இந்த தேர்வில்,  பெண் கைதிகள் 4,பேரும் ஆண் கைதிகள் 17 பேரும் தேர்வை எழுதினார்கள். சிறைக்கைதிகள் தேர்வு எழுதும் மையத்தை சிறைத்துறை டிஐஜி முருகேசன் பார்வையிட்டார். உடன் டிஐஜி கனகராஜ் சிறைக் கண்காணிப்பாளர் நிகிலா ராஜேந்திரன் உடனிருந்தனர்.

Tags:    

Similar News